வடக்கு மாகாணசபை தேர்தல் ; சமூக வலைதளத்தில் குருபரனின் அதிரடி பகிர்வு
நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட தகவலின் படி, மாகாணசபை தேர்தலை அனுர அரசு இந்த வருட இறுதிக்குள் நடத்தும் என்று உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாணத்தில் இருவர் முதலமைச்சர் வேட்பாளர்களாக போட்டியிட உள்ளனர்,
குறிப்பாக வடக்கு மாகாணத்தில் நான் அறிந்த வகையில் இருவர் முதலமைச்சர் வேட்ப்பாளராக போட்டியிடபோகிறார்கள் வீட்டுசின்னத்தில் சங்கு கூட்டணியுடன் இணைந்து சுமந்திரன் அவர்களும் சைக்கிள் சின்னத்தில் தமிழ்தேசிய பேரவையின் ஆதரவோடு முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் அவர்களும் போட்டியிடவுள்ளனர்.

(இந்த நிமிடம் வரைக்குமான உள்ளார்ந்த உறுதிப்படுத்தபட்ட தகவல் 27-02-2026) அநுரவின் தேசிய மக்கள் சக்தி சார்பில் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்று இப்பவரை தெரியாது.
சுமந்திரன் முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் இருவருக்குமிடையிலான போட்டி ஆரோக்கியமாக இருக்கும் ஆனால் அது ஆபத்தாக மாறிவிடகூடாது என்பது என் தாழ்மையான விண்ணப்பம். என்னை பொறுத்தவரை சுமந்திரன் ஐயா ஊழல் இல்லாத அதிக விமர்சனங்களோடு போட்டியிடுகிறார்.
இளஞ்செழியன் ஐயா நேர்மையான துணிச்சலான நீதிபதி ஆனால் அரசியல் அனுபவம் இல்லை இருவரில் எவர் வந்தாலும் ஊழல் இல்லாத தமிழ்தேசிய மாகாண சபையாக இருக்கும் இருக்கவேண்டும்.
இறுதியாக கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற வடக்குமாகாணசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பாக 30 ஆசனங்களை பெருவாரியாகப் பெற்றனர், ஏனையகட்சிகள் 07 ஆசனங்களை மாத்திரமே பெற்றன.
விக்னேஸ்வரன் அவர்களின் திராணியற்ற தலைமைத்துவம் பயனற்ற மாகாண சபையாகிப்போனமை பெரும் கதை அதை வேறொருபதிவில் விபரமாக பார்ப்போம் யார் எதை சொன்னாலும் தீர்ப்புமக்களின் ஒருவிரல் ஜனநாயகபுரட்சியிலேயேசாத்தியம் மக்களே தீர்ப்பாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.