இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதம் ; வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lankan Peoples Ananda Wijepala
By Sahana Oct 15, 2025 01:09 AM GMT
Sahana

Sahana

Report

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை காவல்துறையினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

யாழ். செம்மணி மனித புதைகுழியின் அடுத்த அகழ்வு ; 2 கோடி ரூபாய் நிதிக்கு அனுமதி

யாழ். செம்மணி மனித புதைகுழியின் அடுத்த அகழ்வு ; 2 கோடி ரூபாய் நிதிக்கு அனுமதி

சந்தேகநபரான பெண் கொலைக்கு பின்பு மித்தேனிய பகுதியில் இருந்து யாழ்பாணத்திற்கு சென்று அங்கிருந்து ஜே.கே.பாய் என்ற நபரின் உதவியுடன் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

அதன்போது, செவ்வந்தி சுமார் ரூ.6.5 மில்லியன் செலவழித்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்று மூன்று வாரங்கள் அங்கேயே தங்கி இருந்துள்ளார்.

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதம் ; வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல் | How Ishara Chevvanthi Escaped From The Country

பின்னர் பேருந்து மற்றும் தொடருந்து மூலம் தப்பிச் சென்று, 7 நாட்களுக்குப் பிறகு நேபாளத்தை அடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே நேற்று முன்தினம் (13) நேபாளத்தின் மலைப்பாங்கான பகுதியில் உள்ள ஒரு பல மாடி வீட்டின் மேல் தளத்தில் தங்கியிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இஷாரா செவ்வந்திக்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்ட மற்றொரு பெண்ணுக்கு கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டு, பல்வேறு நாடுகளுக்குத் தப்பிச் செல்ல வழிவகுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நான்கு நாட்களுக்கு முன்னர் நேபாளத்திற்கு சென்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் மற்றும் கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலமாகவே இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள செவ்வந்தி நீண்ட காலமாக தலைமறைவில் இருந்து வந்தார்.

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதம் ; வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல் | How Ishara Chevvanthi Escaped From The Country

சந்தேகநபரான பெண்ணை கைது செய்ய நாடு தழுவிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், அவர் மறைந்திருப்பதாகக் கூறப்படும் பல இடங்களில் காவல்துறையினர் சோதனைகளை நடத்தியிருந்தனர்.

இதுபோன்ற விசாரணைகள் இருந்தபோதிலும், காவல்துறையினரால் செவ்வந்தியை கைது செய்ய முடியாது இருந்த நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகு தற்போது நேபாளத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கொழும்பு குற்றப் பிரிவு மற்றும் நேபாள காவல்துறை இணைந்து சந்தேகநபரான செவ்வந்தியை கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.

இதேவேளை, இஷாரா செவந்தியுடன் மேலும் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US