இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு ; நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி செய்தி
உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை இன்று (02) பவுணுக்கு 5,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (01) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 379,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 384,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 384,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 353,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,163 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் நிலையில், அதன் தாக்கம் உள்நாட்டு சந்தையிலும் தொடர்ந்து பிரதிபலித்து வருவதால், தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் பதிவாகி வருகின்றன.