நாட்டில் மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதோடு இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
இன்று உலக சந்தையில் தங்கத்தின் விலை $4.212ஐத் தாண்டியுள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்று உடன் ஒப்பிடும்போது இன்று (13) ரூபாய் 10,000 அதிகரித்துள்ளது என சந்தை தரவுகள் காட்டுகின்றன.
அதன்படி இன்று காலை கொழும்பு தங்க சந்தையில் 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை ரூபாய் 310.800 ஆக அதிகரித்துள்ளது.
இதன் நேற்றைய விலை ரூபாய் 301.500 ஆகும்.
இதற்கிடையில் நேற்று (12) 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூபாய் 326.000 ஆக இருந்த நிலை இன்று ரூபாய் 336.000 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.