திருமணத்திற்கு தயாரான இளைஞன் விபத்தில் பலி
திருமணத்திற்கு இரு நாட்களும் வெளிநாடு செல்ல மூன்று நாட்களுமே இருந்த நிலையில் விபத்தில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை எற்படுத்தியுள்ளது.
மாத்தறை, அக்குரஸ்ஸயில் சம்பவித்த விபத்தில் 25 வயது லக்மால் என்ற இளைஞர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞசன் ,திருமணப் பதிவுக்காக 2 நாட்களும், வேலைக்காக இஸ்ரேல் செல்வதற்கு 3 நாட்களும் மட்டுமே இருந்த நிலையில் விபத்து சம்பவித்துள்ளது.
தனது பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த கோர விபத்து சம்பவித்துள்ளது.
மகனின் மரணச் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயாரின் இதயத்தில் இரத்தம் உறைந்ததன் காரணமாக தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் மாத்தறை பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.