உடபுஸ்ஸலாவ பகுதியில் இடம்பெற்ற பாரிய தீ விபத்து: முற்றிலும் ஏரிந்த 5 கடைகள்!
கம்பஹா மாவட்டத்தில் உடபுஸ்ஸல்லாவ நகரத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 5 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தீ விபத்து சம்பவம் நேற்று மாலை சனிக்கிழமை (19-02-2022) உடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த தீ விபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்பதுடன் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
அதில், புடவைக் கடைகளும், பிளாஸ்டிக் கடை என பெருமளவில் அடங்குவதாகவும், இதனால் ஏற்பட்ட சொத்து இழப்பு பல இலட்சங்களை தாண்டியுள்ளதாகவும் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தீ பற்றிய நேரத்தில் வேகமான காற்றும் வீசியதாலேயே இந்த கடைத் தொகுதி விரைவாக பற்றி எரிந்துள்ளது. பொலிஸாரும் – பொது மக்களும் தீயணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் தீயை விரைவாக கட்டுப்படுத்த முடியவில்லை.