கனடா, சுவிட்சர்லாந்து அனுப்புவதாக மோசடி; பெண்ணிடம் ஏமாந்த பலர்
கனடா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைதான பெண் ஒருவர் இரண்டு சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வரகாபொல மற்றும் களுத்துறை நீதவான் நீதிமன்றங்களில் குறித்த சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை வரவேற்பு பிரிவில் கடமையாற்றிய பெண்
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு பிரவு அதிகாரிகளால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கனடாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி காலி, நிக்கவெரட்டிய பகுதிகளைச் சேர்ந்த நால்வரிடம் தலா 13 மில்லியன் ரூபாய் வீதம் 52 மில்லியன் ரூபாய் பணத்தை சந்தேக நபர் ஒருவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

ஆனால், அவர் பாதிக்கப்பட்டவருக்கு தொழில் பெற்றுக்கொடுக்கவில்லை. இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி 13 மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண்ணொருவரும் களுத்துறையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
குறித்த பெண் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் வரவேற்பு பிரிவில் கடமையாற்றியவர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்க 0112882228 எனும் இலக்கத்தினூடாக அறிவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.