வெளிநாட்டிலிருந்து வந்த வர்த்தகர் இலங்கையில் அதிரடி கைது
சுமார் 3 கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இலங்கை வர்த்தகர் ஒருவர் இன்று (18) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் சுங்கப்பிரிவினர் முன்னெடுத்த சோதனையின் போது குறித்த நபர் கைதாகியுள்ளார்.

கொழும்பு வர்த்தகர்
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் அனுமதியின்றி, 34 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த 390 கையடக்க தொலைபேசிகள் இவ்வாறு கடத்தி வரப்பட்டுள்ளன.
சந்தேகநபர் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய வர்த்தகர் ஒருவர் என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் இன்று காலை 7.00 மணிக்கு இந்த கையடக்க தொலைபேசிகளுடன் டுபாயில் இருந்து இலங்கை விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான UL-226 விமானத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.