இலங்கையுடனான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கும் விமானங்கள்!
ரஷ்யாவின் மிகப்பெரிய வர்த்தக விமான நிறுவனமான அஸூர் எயார் மற்றும் பிரான்சின் எயார் பிரான்ஸ், இலங்கைக்கான விமான சேவைகளை இந்த வாரம் முதல் தொடங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அஸூர் எயார், எயார் பிரான்ஸ்
அதன்படி, அஸூர் எயார் இன்று(03) முதல் இலங்கைக்கான விமானங்களைத் முன்னெடுக்கும் அதேவேளையில் எயார் பிரான்ஸ் நாளை(04) முதல் சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, சுவிட்சர்லாந்தின் தேசிய விமான நிறுவனமான சுவிஸ் இன்டர்நேஷனல் எயார்லைன்ஸ், எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மே 2023 வரை வாராந்திர விமானங்களுடன் மீண்டும் இலங்கைக்கான தமது சேவையை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இந்த பருவ காலத்தில் நாட்டுக்குவரும் ஐரோப்பிய சுற்றுலா பயணிகளின் வருகையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.