முதல் முறையாக இலங்கை எழுத்தாளருக்கு கிடைக்கபெற்ற பரிசு
இலங்கை எழுத்தாளரான ஷெஹான் கருணாதிலக்க என்பவர் 2022 ஆம் ஆண்டின் புக்கர் பரிசை (Booker Prize) வென்றுள்ளார்.
இலங்கை எழுத்தாளர் ஒருவருக்கு இப்பரிசு வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
லண்டனில் நடந்த வைபவத்தில் பிரித்தானிய ராணி கமீலாவிடமிருந்து இப்பரிசை ஷெஹான் கருணாதிலக்க (Shehan Karunatilaka) பெற்றுக்கொண்டார்.
அவர் எழுதிய The Seven Moons of Maali Almeida (த செவன் மூன்ஸ் ஒவ் மாலி அல்மேய்டா) எனும் நாவலுக்காக இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
நாவல் தொடர்பான வெளியீடு
இலங்கை யுத்தம் தொடர்பான புனைக்கதையான நாவல் 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது.
ஆங்கில மொழியில் எழுதப்பட்டு, ஐக்கிய இராச்சியம் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்பட்ட புனைக்கதை நாவல்களுக்காக 1969 ஆம் ஆண்டு முதல் புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. இலக்கிய உலகில் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றாக புக்கர் பரிசு கருதப்படுகின்றமை குறுப்பிடத்தக்கது.
புக்கர் பரிசு வெற்றியாளருக்கு 50,000 ஸ்ரேலிங்ஸ் பவுண்ட்ஸ்கள் ( 2 கோடி இலங்கை ரூபா) வழங்கப்படும்.
இப்பரிசுக்கான குறும்பட்டியலில் இடம்பெறும் ஐவருக்கு தலா 2.500 ஸ்ரேலிங்ஸ் பவுண்ட்ஸ்கள் வழங்கப்படும்.
இவ்விருதுக்கான குறும்பட்டியலில் இடம்பெற்றிருப்பது பெரும் கௌரவமாகும் என ஷெஹான் கருணாதிலக்க கூறினார்.