யாழில் 20 நாட்களாக அனுபவித்த வலி... பரிதாபமாக உயிரிழந்த குடும்பப் பெண்!
யாழ்ப்பாணத்தில் 20 நாட்கள் தொடர் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்த குடும்பப் பெண்ணொருவர் இன்றையதினம் (28-08-2024) உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் நாரந்தனை மத்தி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த அன்னலட்சுமி நடராசா என்ற 7 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த குடும்பப் பெண் கிளிநொச்சியில் மகள் வீட்டில் இருந்தவேளை கடந்த7ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டதால் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இருப்பினும் இடையிடையே காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் 17ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
அதன்பின்னரும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 19 ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின்னர் 27ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.