வயோதிப பெண் துஸ்பிரயோகம் செய்து கொலை ; கடைக்கு அருகில் ஆடையின்றி கிடந்த சடலம்
மஹரகம நகரிலுள்ள கடையொன்றிற்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (27) மஹரகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த சடலம் நிர்வாணமாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை
சம்பவத்தில் உயிரிழந்தவர் கும்புகவத்தை - கோனபல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைகள் களுபோவில வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன், குறித்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பரிசோதனைகளின்போது தெரியவந்துள்ளது.
சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களைக் கைது செய்ய மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.