மலர்சாலையில் போதைப்பொருள் வியாபாரம்; தாயும் மகனும் கைது
பாணந்துறை வடக்கு பிரதேசத்தில் இயங்கி வந்த பிரபலமான மலர்ச் சாலை ஒன்றில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட தாயையும் மகனையும், பாணந்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் நேற்று (25) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், இந்த மலர்ச் சாலையின் உரிமையாளரான மகனும் அவரது தாயாரும் 21 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மகனுக்கு 39 வயது எனவும், தாயாருக்கு 69 வயது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபர்கள் தொடர்பில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும் கைதான சந்தேகநபர்கள் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.யால்