பிரான்ஸில் இலங்கைத் தமிழருக்கு 12 மாத சிறை; காரணத்தால் ஷாக்!
பிரான்ஸில் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, மனைவி, பிள்ளைகளை கொடூரமாக தாக்கிய இலங்கைத் தமிழருக்கு 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 5ஆம் திகதி நீதிமன்றத்தில் இலங்கை தமிழரான ஜோசப் கே என்ற நபர் தனது மனைவி மற்றும் மகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டார்.

எந்த நேரத்திலும் நாடு கடத்தப்படலாம்
கடந்த வருடம் அதிக போதையில் இருந்த அவர், தனது மனைவியின் மூக்கை உடைத்த நிலையில் பாதிக்கப்பட்ட மனைவிக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் பிரான்ஸ் வந்த காலப்பகுதியில் இருந்து மனைவியை துன்புறுத்தி வந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணையில் ஜோசப் கே.வின் மகள் தாயாருக்கு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டு நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
அதேவேளை, ஜோசப் கேவின் வதிவிட அனுமதி காலவதியான நிலையில், அவர் எந்த நேரத்திலும் நாடு கடத்தப்படலாம் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக குடும்பத்தினருடன் அவர் இணைந்து இருப்பது, அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்துத் தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், இலங்கை தமிழரான ஜோசப் கே.க்கு 12 மாத சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.