கதிர்காமம் பிரதேச சபை கலைப்பு! வர்த்தமானி வெளியீடு
கதிர்காமம் பிரதேச சபை கலைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் (22-09-2022) நள்ளிரவு முதல் இவ்வாறு கலைப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊவா மாகாண ஆளுநர் A.J.M.முஸம்மில்லினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கதிர்காமம் பிரதேச சபையின் அதிகாரங்களை பிரயோகித்து பணிகளை மேற்கொள்ள மொனராகலை உதவி மாகாண ஆணையாளருக்கு குறித்த வர்த்தமானியூடாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கதிர்காமம் பிரதேச சபையின் தலைவர் உட்பட அதன் உறுப்பினர்கள் பல்வேறு மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையின் போது தெரியவந்ததை அடுத்து, கதிர்காமம் பிரதேச சபை கலைக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் A.J.M.முஸம்மில் தெரிவித்துள்ளார்.