இலங்கையில் கொரோனா அச்சத்தால் செத்துப்போன மனிதநேயம்!
மழையில் நனைந்தபடி நபரொருவர் வலிப்பினால் பாதிக்கப்பட்டு நிலத்தில் விழுந்து அவதியுறும் காணொளியொன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
குறித்த நபர் கீழே விழுந்து வலிப்பினால் அவதிப்படும் நிலையில் பாதிக்கப்பட்ட நபரை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லவோ அல்லது அவர் அருகில் செல்வதற்கோ கூட மக்கள் தயங்குகின்றனர்.
ஆனால் அதனை காணொளியாக பதிவு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று அச்சம் காரணமாக பொது இடங்களில் இவ்வாறான நிலைக்கு உள்ளாகும் நபர்களுக்கு உதவி செய்வதற்கு அச்சப்படும் நிலை தொடர்ச்சியாக பதிவாகி வருகிறது.
நாட்டில் கொரோனா அச்சம் நிலவுகின்ற போதும் ஒரு மனித உயிர் ஆபத்தில் இருக்கும்போது, அதனை காணொளி பதிவு செய்வதில் உள்ள ஆர்வம், அவருக்கு உதவ வேண்டும் என்ற மனிதாபிமானம் கூட நாட்டில் மரித்து வருகிறதா என சமூக ஊடகங்களில் கேள்வியெழுப்பப்பட்டு வருகிறது.