யாழில் சுழன்றடித்த காற்று ; மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம், மக்களுக்கு வெளியான அறிவிப்பு
வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கத்தின் காரணமாக வடமராட்சி கடற்பரப்புகளில் நேற்று (09) அதிக காற்று வீசியுள்ளது.
விடுக்கப்பட்ட எச்சரிக்கை இதன் போது, அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகளாக கடற்றொழிலாளர்கள் தங்களுடைய கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தியுள்ளனர்.

பலமான காற்று
பலமான காற்று வீசியதாலும் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாலும் சுற்றுலா வாசிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வலுக்குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.