குடிமனைகளுக்குள் புகுந்த யானைகளால் பயிர்கள் நாசம்
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள ஈச்ச நகரில் காட்டு யானைகள் தங்களது பயிர்களை துவம்சம் செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இன்று சனிக்கிழமை (22) அதிகாலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. யானைகளால் பயன் தரும் வாழை, தென்னை, மரவள்ளி உள்ளிட்ட பல மரங்களை யானைகள் துவம்சம் செய்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இக் காட்டு யானைகள் தொடர்ந்தும் தங்களது ஊருக்குள் இரவு வேலைகளில் வருவதனால் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தங்களது வீடுகளுக்கும் பயிர்களுக்கும் சேதம் விளைவித்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
சுமார் 15 க்கும் மேற்பட்ட தென்னை, வாழை மரங்களை முற்றாக நாசமாக்கியுள்ளதாகவும் குறித்த பகுதியில் பாதுகாப்பான யானை வேலி இன்மையால் இச் சம்பவங்கள் இடம் பெறுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளிடத்தில் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.