கொழும்பில் பலப்படுத்தப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்!
கொழும்பில் செயற்பாட்டில் இருந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கை இன்றைய தினம் (15-05-2023) முற்பகல் முதல் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, வழமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பொலிஸ், இராணுவம், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், மற்றும் பொலிஸ் கலகத் தடுப்பு பிரிவினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நடவடிக்கை புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.