கொழும்பு - புத்தளம் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு!
Colombo
Puttalam
Sri Lanka Railways
Department of Railways
By Shankar
ராகம மற்றும் ஜாஎல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து சீதுவை நோக்கி பயணித்த சரக்கு ரயிலின் இயந்திரமே தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பு - புத்தளம் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கொழும்பில் இருந்து புத்தளம் வரை செல்லும் ரயில்கள் காலதாமதமாக செல்லும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த ரயில் இயந்திரம் தடம் புரண்ட இடத்துக்கு சேவை ரயில் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இயந்திரத்தை தடம்மேற்றும் பணிகளுக்கு சில மணிநேரம் ஆகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US