மரணசடங்கில் களேபரம்; பெண் உட்பட நால்வர் காயம்
மொறட்டுவை - எகொடஉயன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்துக்கு இலக்காகி பெண் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக எகொடஉயன பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நால்வரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரு தரப்பினருக்கு இடையில் வாக்குவாதம்
இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்துகொண்ட இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சந்தேக நபர் தாக்குதலுக்குப் பயன்படுத்திய கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தொடர்பான மேலதிக விசாரணைகளை எகொடஉயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.