இரகசிய தகவலால் சிக்கிய சிவில் உத்தியோகத்தர் ; நீண்டகாலமாக அரங்கேறிய செயல் அம்பலம்
அம்பாறை நகரத்திற்கு உகணையில் இருந்து போதைப்பொருளை நீண்டகாலமாக கடத்தி வந்து வியாபாரத்தில் ஈடுபட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவரை ஜஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (06) கைது செய்துள்ளதாக அம்பாறை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிணையடுத்து பொலிஸ் குழுவினர் சம்பவ தினம் இரவு 10.00 மணிக்கு அம்பாறை நகர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

போதைப்பொருள் வியாபாரம்
இந்த நிலையில் உகண திஸ்ஸபுர கிராமத்தில் இருந்து அம்பாறை நகருக்கு போதைப்பொருளை எடுத்துக்கொண்டு சென்ற ஒரு வியாபாரியை போதைப்பொருளுடன் கைது செய்து அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அம்பாறை பாலிகா சந்தியில் வைத்து சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான வியாபாரியை ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.
யாழ் மாவட்டத்திற்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து ; பேரழிவை சந்திக்கும் ; எச்சரிக்கும் யாழ். பல்கலையின் விரிவுரையாளர்
இதில் கைது செய்யப்பட்ட இருவரும் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.