பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம்: அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!
சென்னையில் பிரதான சாலையான அண்ணா சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் சமீப நாட்களாக பல இடங்களில் திடீர் பள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
இவ்வாறான நிலையில், சென்னை அண்ணா சாலையில் ஏற்கனவே சில முறை பள்ளம் ஏற்பட்டுள்ளது என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட மயிலாப்பூரில் பள்ளம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள காசினோ திரையரங்கம் அருகே திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டது.
தற்சமயம் பள்ளத்தை சுற்றி பாதுகாப்பு தடுப்புகள் போடப்பட்டுள்ளதாகவும் இந்த பள்ளம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.