தொலைபேசி ஊடாக வந்த அழைப்பு... பெருந் தொகையை பறிகொடுத்த வர்த்தகர்கள்!
மஸ்கெலியாவில் இன்று (14-08-2024) காலை முதல் மதியம் வரை இலங்கை தொலைத்தொடர்பு தொலைபேசி ஊடாக அழைப்பை ஏற்படுத்தி தங்களுக்கு எமது நிறுவனம் ஊடாக அதிஷ்டம் கிட்டியுள்ளதாக கூறி கூறிபெருந் தொகையில் வர்த்தகர்களிடம் இருந்து மோசடி செய்யப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, பணப்பறிப்பு பண பரிமாற்றம் வங்கிகள் ஊடாக இடம்பெற்றுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் வர்த்தகர்களால் முறைப்பாடுகள் பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மஸ்கெலியா வர்த்தகர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து நாளை காலை பொலிஸ் நிலையத்தில் வர்த்தகர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதேவேளை, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வர்த்தகர்கள் இதற்கு மேல் ஏமாற வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.