யாழில் சகோதரின் தங்க நகையை திருடி சகோதரன் செய்த செயல்! பரபரப்பு வாக்குமூலம்
யாழப்பாணத்தில் சகோதரியின் 05 பவுண் தங்க நகையை திருடி அடகு வைத்து மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி வாங்கிய குற்றச்சாட்டில் சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் இருந்த தனது 05 பவுண் நகை திருடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் முறைப்பாட்டாளரான பெண்ணின் சகோதரனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையாகி சிறைத் தண்டனை அனுபவித்து தற்போது விடுதலையாகியுள்ள நபர் என்பது தெரியவந்துள்ளது,
மேலும் அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நகையை திருடி அடகு வைத்து, அந்த பணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கையடக்க தொலைபேசி என்பவற்றை வாங்கியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.