திருமணம் முடிந்த கையோடு கல்லறைக்கு பயணம் மணமக்கள்! ஏன் தெரியுமா?
திருமணம் வாழ்க்கையில் மிகப்பெரிய நிகழ்வு திருமணத்திற்குப் பின் புதுமண தம்பதியர் தேனிலவு செல்வார்கள். இந்நிலையில் மலேசியாவில் திருமணமான உடனேயே கல்லறை சென்ற ஜோடி தொடர்பிலான தகவலொன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இருவரும் சேர்ந்து மயானத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை செய்தனர். மலேசியாவை சேர்ந்த 34 வயதான முஹம்மது ரிட்ஜீவன் ஒஸ்மான் மற்றும் அவரது மனைவி நூர் அஃபிஃபா ஹபீப்(26), டிசம்பர் 13 அன்று திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு தேனிலவுக்குச் செல்வதற்குப் பதிலாக, கணவனும் மனைவியும் கொரோனா முன்களப் பணியாளராக மாற முடிவு செய்தனர். திருமணமான முதல் வாரத்தில் கொரோனாவால் இறந்த நோயாளிகளின் இறுதிச் சடங்குகளை செய்ய முடிவு செய்தனர்.
மணமகன் ரிட்ஜீவன், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் காங்குல்-கி குழுவில் உறுப்பினராக உள்ளார், திருமணம் முடிந்த அடுத்த நாளே, கொரோனா நோயாளி இறந்த பிறகு, அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என குழுவிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக ரிட்ஜீவன் கூறினார்.
இந்நிலையில் அவரது மனைவியும் கணவருடன் செல்ல ஒப்புக்கொண்டார். தம்பதியினர் உடனடியாக கல்லறைக்குச் சென்றனர், அங்கு அவர்கள் கொரோனாவால் இறந்த நோயாளிகளின் உடல்களை தகனம் செய்தனர்.

சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடலை தம்பதியினர் தகனம் செய்தனர். ரித்ஜீவன் அங்கம் வகிக்கும் குழுவில், சமூக சேவைக்காக அதனுடன் இணைந்த பலர் உள்ளனர். இவர்கள் வேறு இடங்களில் பணிபுரிந்தாலும், சமூக சேவைக்காக இந்த குழுவிற்கு உதவுகிறார்கள்.
அதேவேளை , இந்த குழுவுக்கான தங்கள் பணி இப்போதைக்கு நிற்கப் போவதில்லை என்று தம்பதியினர் தெரிவித்தனர்.
திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினர் இதுவரை 15 உடல்களை எரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் பல்லரும் இந்த ஜோடியை பாராட்டி வருகின்றனர்.