வவுனியாவில் அடையாளம் காணப்படாத இளம் பெண்ணின் சடலம் ; உதவி கோரும் பொலிஸார்
வவுனியா பாவற்குளத்தில் இருந்து அடையாளம் காணப்படாத இளம்பெண்னின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று வியாழக்கிழமை (21) மாலை பாவற்குளம் பகுதிக்கு சென்ற இளம்பெண் ஒருவர் குளத்தினுள் வீழ்ந்துள்ளார்.
குளத்தினுள் வீழ்ந்து பலி
இதனை அவதானித்த சிலர் உடனடியாக விரைந்து செயற்பட்டு பெண்ணை மீட்டதுடன் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
எனினும் மீட்கப்பட்ட பெண் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் முன்னரே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் 18 மற்றும் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணே சடலமாக மீட்கப்பட்டதுடன், அவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பாக உலுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.