பிறந்தநாளன்று நேர்ந்த துயரம் ; குளிக்க சென்ற மாணவி திடீர் மரணம்
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் மாணவியொருவர் தனது பிறந்தநாளன்று உயிரிழந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிசார் விசாரணை
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியருவதாவது,
சிராவட்டம் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு முடித்த ஸ்ரேயா, கல்லூரி பயணத்தை தொடங்க உள்ள சந்தோஷத்தில் இருந்தார்.
அவரது பிறந்த நாளன்று காலை குளிக்க சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார்.
அதை பார்த்த தாய் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவர்களின் ஆரம்பமான மதிப்பீட்டுப்படி, மாரடடைப்பு காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மரணத்திற்கான காரணம் உறுதிப்படுத்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகிழ்ச்சியான பிறந்தநாள் ஒன்று, ஒரே நொடியில் துயர நினைவாக மாறியுள்ளது.