எமது ஆட்சியை எவரும் கவிழ்க்க முடியாது அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பசில் ராஜபக்ச!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை எனவும், ஒருவரையொருவர் பதவி விலகவும் கோரவில்லை என்றும் முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “நாட்டில் இன்று பெரும்பாலான ஊடகங்கள் எமது அரசுக்கு எதிராகவே செய்திகளை வெளியிடுகின்றதாகவும், .ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின்படி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை எனவும் அவர் கூறினார் .
அதோடு ஜனாதிபதியைப் பதவி விலகுமாறு பிரதமரோ அல்லது பிரதமரைப் பதவி விலகுமாறு ஜனாதிபதியோ கோரவில்லை. எனவே, ஊடகங்கள் உண்மைத்தன்மையுடன் செய்திகளை வெளியிட வேண்டும் நடுநிலையுடன் செயற்பட வேண்டும்.
அதேசமயம் நாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியை எவரும் கவிழ்க்க முடியாது என தெரிவித்த பசில், , ஜனாதிபதியையும் பதவியிலிருந்து எவரும் விரட்ட முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.