பிணையாளருக்கு நேரடியாக வழக்கு தொடரலாம் ; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Sri Lanka Sri Lanka Banks High Court of Sri Lanka
By Sahana May 29, 2026 05:51 AM GMT
Report

முதன்மைக் கடனாளிக்கு எதிராக முதலில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் பிணையாளருக்கு எதிராக, கடன் வழங்கிய நிறுவனம், நேரடியாக வழக்குத் தொடர சட்டப்பூர்வ உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு நபர் ஒருவர் தாக்கி கொலை ; வாக்குவாதம் விபரீதத்தில் முடிந்தது

கொழும்பு நபர் ஒருவர் தாக்கி கொலை ; வாக்குவாதம் விபரீதத்தில் முடிந்தது

எனினும் இதற்கான நிபந்தனையாக பிணைய ஒப்பந்தத்தில் பிணையாளர் தனது அந்த உரிமையை வெளிப்படையாக விட்டுக்கொடுத்திருக்க வேண்டும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

வங்கி ஒன்றிடம் கடன் வசதிகளைப் பெற்ற நிறுவனம் ஒன்றின் பிணையாளரான விதானகே ஹப்பாவன என்பவரைப் பொறுப்பாக்கிய வணிக மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்து உயர்நீதிமன்றம் இந்த மேன்முறையீட்டுத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

பிணையாளருக்கு நேரடியாக வழக்கு தொடரலாம் ; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Bank Right Recover The Loan Amount From Guarantor

குறிப்பிட்ட நிறுவனத்தின் கடன் வசதிகளுக்காகப் பிணையாக இருந்த பிரதிவாதியிடமிருந்து வட்டியுடன் சேர்த்து 5.5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை மீட்டெடுப்பதற்காக வங்கி இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தது.

எனினும் இதற்குப் பதிலளித்த பிரதிவாதி கடனைப் பெற்ற மற்றும் அதன் முழுப் பலனையும் அனுபவித்த நிறுவனம் தான் முதன்மைக் கடனாளி என்பதால் இந்த வழக்கில் அந்த நிறுவனத்தையும் ஒரு தரப்பாகச் சேர்த்திருக்க வேண்டும் என்றும், தனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன் அந்த நிறுவனத்திற்கு எதிராகவே முதலில் வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

இந்தநிலையில்,ரோம-டச்சு சட்டத்தின் கீழ் பொதுவாக ஒரு பிணையாளர் முதன்மைக் கடனாளிக்கு எதிராக முதலில் வழக்குத் தொடர வேண்டும் என்று வற்புறுத்த உரிமை உண்டு என்றாலும், அத்தகைய உரிமையை ஒப்பந்தத்தின் மூலம் வெளிப்படையாகத் துறக்க முடியும் என்று உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வழக்கைத் தீர்த்து வைத்துத் தீர்ப்பளித்த நீதியரசர் சம்பத் விஜேரத்ன, பிணைய ஒப்பந்தத்தின் 15-வது பிரிவின்படி, முதன்மைக் கடனாளிக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுக்காமல், நேரடியாகப் பிணையாளருக்கு எதிராகத் தொடர வங்கிக்குத் தெளிவான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிணைய ஆவணங்களின் உள்ளடக்கங்கள் தனக்குத் தெரியாது என்றும், வெற்றுத் தாள்களிலேயே தான் கையெழுத்திட்டதாகவும் பிரதிவாதி முன்வைத்த வாதத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சர்வதேச நாணய நிதியம்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சர்வதேச நாணய நிதியம்

கையெழுத்திட்ட நபர் எழுதப் படிக்கத் தெரியாதவராகவோ பார்வையற்றவராகவோ அல்லது பரிவர்த்தனையின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியாதவராகவோ இருந்தால் ஒழிய இத்தகைய வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

இதன்படி வணிக மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்த உயர் நீதிமன்றம், இரண்டு நீதிமன்றங்களினதும் வழக்குச் செலவுகளைப் பெற்றுக்கொள்ள மனுதாரரான வங்கிக்கு உரிமை உண்டு என்றும் தெரிவித்துள்ளது.

நீதியரசர்களான யசந்த கோதாகொட ஷிரான் குணரத்ன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பெண்களுக்கு சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறை? ; அரசாங்கத்திடம் கோரிக்கை

பெண்களுக்கு சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறை? ; அரசாங்கத்திடம் கோரிக்கை

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US