அசைவ உணவு உண்பவர்களா நீங்கள் ; மிஸ் பண்ணமா இதையும் படியுங்கள்
முரண்பாடான உணவுகளை ஒரே நேரத்திலோ அல்லது குறிப்பிட்ட இடைவெளியிலோ உண்ணும்போது, தோல் நோய், கீல்வாதம் மற்றும் உடலின் உள் உறுப்புகளுக்கோ பிரச்சினைகளை ஏற்படுத்தும்
பசித்தவருக்கு தான் எது கிடைத்தாலும் உண்ணலாம் என்று தோன்றும். பெரும்பாலனவர்களுக்கு உணவு என்றவுடன் அதன் சுவை தான் நினைவுக்கு வருகிறது. ஆரோக்கியத்தை கவனிப்பதை விட தங்கள் சுவை மொட்டுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கிறோம்.
ஆனால் நாம் உண்ணும் உணவு எவ்வளவு ஆபத்தானது மற்றும் தீங்கு விளைவிக்கும் என்பதை அறியாமல், பிடித்தது, சுவையானது, மணமானது என்ற ஆசைகளுக்கு முக்கியம் கொடுத்து, விபரீதமான காம்பினேஷனில் உணவு உண்கின்றனர்.
எந்த உணவுடன் எதை சேர்த்தோ அல்லது குறிப்பிட்ட மணி நேரங்களுக்குள்ளோ உண்ணக்கூடாது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதிலும், அசைவ உணவு உண்பவர்கள், சாப்பிட்ட பிறகு உடனடியாக உண்ணக்கூடாதவை என்ற பட்டியலும் உள்ளது. இதற்கு காரணம் என்ன என்பதை முதலில் தெரிந்துக் கொள்வோம்.
அசைவ உணவுக்கு பிறகு பால்
அசைவப் பொருட்களை சாப்பிட்ட பிறகு பால் பொருட்களை குடிக்கவேக்கூடாது. ஏனென்றால் பால் உடலை குளிர்விக்கிறது, அசைவ உணவுகள் உடலை சூடாக்குபவை. இவை இரண்டையும் ஒன்றாக உட்கொண்டால், அது ஹார்மோன்களை குழப்பி, உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
உடலில் ஒவ்வாமை ஏற்படும். அதிலும், குறிப்பாக மீன் மற்றும் பால் பொருட்கள் கொண்ட கலவையான உணவை உட்கொண்ட பிறகு, இரத்தத்தில் ஏற்படும் இரசாயன எதிர்வினை, சருமத்திற்கு நிறத்தை கொடுக்கும் ஹார்மோன்களில் பிரச்சனையை ஏற்படுத்தி, லுகோடெர்மா / விட்டிலிகோ போன்ற சருமத்தின் நிறம் மாறும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
மீன், கோழி, ஆட்டிறைச்சி
அதேபோல், பால் குடித்த பிறகு மீன், கோழி, ஆட்டிறைச்சி சாப்பிடக்கூடாது, ஏனென்றால், இரு வகையான புரதங்களை ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளும்போது, அவை செரிமானம் ஆக பல்வேறு வகையான செரிமான சாறுகள் தேவைப்படும். இது உடலின் ஹார்மோனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி, இரு புரதங்களுமே செரிமானம் ஆவதில் பிரச்சனையை ஏற்படுத்தும்.
இவை, உடலின் செரிமான மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புகளை மோசமாக பாதிக்கிறது. பால் மற்றுமல்ல, பால் பொருட்களான தயிர், டீ போன்றவற்றையும் அசைவ உணவுகளுடன் சேர்த்து உண்ணக்கூடாது.
கிரீன் டீ, மூலிகை தேநீர்
அதேபோல, அசைவ உணவுகளுடன், கிரீன் டீ, மூலிகை தேநீர், குளுக்கோஸ், காஃபின் மற்றும் காபி போன்ற பானங்களைக் குடிக்கக்கூடாது.
இந்த பொருட்கள் உடலை சூடாக்கும் மற்றும் அஜீரணம் மற்றும் வயிற்று எரிச்சலை ஏற்படுத்தும். பொதுவாக, அசைவப் பொருட்களை உட்கொண்ட பிறகு, வெந்நீர் குடிக்கவும், இது உணவு விரைவாக செரிமானம் ஆக உதவும்.
வெந்நீர்
வெந்நீர் குடிப்பதால் உடலில் படியக்கூடிய கொழுப்புகள் வெளியேறும். நாம் என்ன சாப்பிடுகிறோம், அது உடலில் எதுபோன்ற செயல்களை செய்யும், என்ன எதிர்வினையாற்றும் என்பதை உணர்ந்து உண்டால், உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.