அர்ச்சுனா எம்பிக்கு சபையில் ஏற்பட்ட சங்கடம்!
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்றையதினம்(08) நாடாளுமன்றில் உரையாற்றியபோது நேரடி ஒளிபரப்பு சேவை இடைநிறுத்தப்பட்டது.
இராமநாதன் அர்ச்சுனா எம்பி பாராளுமன்றத்தில் வெளியிடும் அறிக்கைகளை, காணொளி மற்றும் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்புவது இடைநிறுத்தப்படுவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கடந்த மாதம் 19ஆம் திகதி நாடாளுமன்றில் அறிவித்தார்.
நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு தடை
அதன்படி, எதிர்வரும் 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு சபாநாயகரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றையதினம்(08) நடாளுமன்ற அமர்வின் போது அர்ச்சுனா எம்பி உரையாற்றும் போது, கௌரவ சபாநாயகர் அவர்களினால் மார்ச் 19, 2025 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பிறப்பித்த உத்தரவின் பேரில் நேரடி ஒளிபரப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு இடம்பெற்றிருந்தது.
அத்துடன் அர்ச்சுனா எம்பி உரையாற்றிய பின்னர் தொடர்ந்தும் ஒளிபரப்பு சேவை மீண்டும் ஆரம்பித்தது.