நீண்ட நாள் கழித்து வெளியே வந்த பாடகர் எஸ்பிபி மனைவி; மன்னிப்பு கேட்ட சரண்!
கடந்த ஆண்டு கொரோனா தொற்று உச்சத்தை எட்டிய போது, தொற்றில் பாதிக்கப்பட்ட பிரபலங்களுள் எஸ்பி பாலசுப்ரமணியமும் ஒருவர். அவர் கொரோனாவில் குணமடைந்திருந்தாலும், நுரையீரல் மற்றும் இதய பாதிப்புகளால், போன வருடம் செப்.,25ம் திகதி காலமானார்.
இதனையடுத்து அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள எஸ்பிபியின் பண்ணைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அவர் இந்த மண்ணை விட்டுப் பிரிந்து இன்றுடன் ஓராண்டாகி விட்டது.
முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சிவன் பக்தர் என்பதால், அவருடைய நினைவிடத்தில் சிவலிங்கம் வடிவத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தபோதும், கொரோனா காலம் என்பதால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் எஸ்பிபியின் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் எஸ்பிபியின் மகனும், பாடகருமான எஸ்பிபி சரண் பேசுகையில்,
அப்பாவுக்கு மணிமண்டபம் கட்ட அரசின் உதவி கேட்ப இருக்கிறோம். யார் வேண்டுமானாலும் உதவலாம். இந்த மணிமண்டபம் கட்டி முடிக்க ஓராண்டுகள் பத்தாது. அருங்காட்சியகம், அரங்குகள் கட்ட திட்டமிட்டிருக்கிறோம். இதற்கான வரைபடம் எல்லாம் தயாரான பிறகு அரசிடம் சென்று கோரிக்கை வைப்பேன்.
இன்று நீண்ட நாள் கழித்து என் அம்மா வெளியே வந்தார். அப்பாவுக்காக நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், அவருடைய பெயரைக் கெடுக்காமல் இருக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.
கொரோனா காலம் என்பதால் அப்பாவின் நினைவிடத்தில் யாரையும் அனுமதிக்கவில்லை இதற்காக மன்னித்து விடுங்கள், என சரண் உருக்கமாக கூறியுள்ளார்.