ஜனாதிபதி ரணில் குறித்து அன்ரன் பாலசிங்கம் அன்று கூறியது இன்று பலித்தது!

Ranil Wickremesinghe Sri Lanka President of Sri lanka
By Sulokshi Aug 04, 2022 02:35 PM GMT
Report

  இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பலரும் அரசியல் நரித்தந்திரம் மிக்கவர் என பலரும் கூறிவரும் நிலையில், மூத்த ஊடகவியலாளர் நிக்சன் இது தொடர்பில் அவரது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது,

ரணில் விக்கிரமசிங்கவை அன்ரன் பாலசிங்கம் நரி எனக் கூறியபோது, சிங்கள அரசியல் தலைவர்கள் பலரும் அன்று கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஆத்திரமடைந்தனர். அப்படிச் சொன்னதற்காகச் சர்வதேச நாடுகள்கூட அன்ரன் பாலசிங்கத்தை ஓரக்கண்ணால் பார்த்தன.

ஆனால் 2009 இற்குப் பின்னரான சூழலில் இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்கள அரசியல்வாதிகள் பலரும் ரணில் விக்கிரமசிங்கவை நரி என்றே விழித்துக்கூறினர்.

ஜனாதிபதி ரணில் குறித்து  அன்ரன் பாலசிங்கம் அன்று கூறியது இன்று பலித்தது! | Anran Balasingham Said Ranil Has Worked Today

சர்வதேச நாடுகளும் ரணில் விக்கிரமசிங்கவின் நகர்வுகளை முன் எச்சரிக்கையாகவே எடுத்துக் கொண்டன. அவ்வளவு தூரத்துக்கு ரணிலின் அரசியல் நகர்வுகள் அவர்களைத் திக்குமுக்காட வைத்திருக்கின்றன என்பதே அதன் பொருள்.

இருந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவிடம் புவிசார் அரசியல் புலமை இருப்பதாகச் சர்வதேச நாடுகள் இன்றுவரை முன் எச்சரிக்கையோடு நம்புகின்றன. இதன் காரணத்தினாலேயே ஜனாதிபதித் தெரிவின்போது, டளஸ் வந்தால் கையாள முடியும் என்ற ஒரு சிறிய நம்பிக்கை அமெரிக்க - இந்திய அரசுகளுக்கு இருந்தது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

இந்த நிலையில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் ரணில் தன்னுடைய அரசியல் நகாரீகமற்ற தன்மையை வெளிப்படுத்திருக்கிறார். ஜனாதிபதித் தெரிவில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தனக்கும் வாக்களித்துள்ளனர் என்று அவர்கள் முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க கூறியமை, அவருடைய அரசியல் வறுமையைப் புட்போட்டுக் காண்பித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் குறித்து  அன்ரன் பாலசிங்கம் அன்று கூறியது இன்று பலித்தது! | Anran Balasingham Said Ranil Has Worked Today

அதாவது சர்வதேசம் இன்றுவரை நம்பிய ரணிலின் அரசியல் புலமை என்பதற்குள், சின்னத் தனமும் (Smallness) உண்டு என்பது வெளிப்பட்டுள்ளது. பிரித்தாளும் தந்திரத்துக்காகவே தனக்கு வாக்களித்த உள்ளகத் தகவலை ரணில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் முன்னிலையில் வெளியிட்டார் என்று சிலர் கருதலாம். ஆனால், கூட்டமைப்பைப் பிரித்தாள வேணடிய அவசியமே இல்லை. ஏற்கனவே அது பிரிந்துதான் இருக்கிறது.

வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்தால், வெளியே சொல்லக்கூடாதென்ற பல இராஜதந்திரத் தகவல்களைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் திரிபுபடுத்திக்கூறி அசிங்கப்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களும் உண்டு.

டளஸ் அழகப் பெருமாவை ஆதரிக்கும் விடயத்தில் இந்தியத் துணைத் தூதுவர் தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படும் விடயமும், அது பற்றிய முன்னுக்குப் பின் முரணான தகவல்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இயலாமையைப் பகிரங்கப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி ரணில் குறித்து  அன்ரன் பாலசிங்கம் அன்று கூறியது இன்று பலித்தது! | Anran Balasingham Said Ranil Has Worked Today

முதிர்ச்சியடைந்ததாகத் தங்களைத் தாங்களே கூறிக்கொள்ளும் தமிழ்த் தலைவர்களின் முதிரச்சியற்ற தன்மையும் அது கோடிட்டுக் காண்பித்தது. இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவும் அசிங்கமான அரசியல்வாதியாகத் தன்னை நிறுவியுள்ளார்.

அன்டன் பாலசிங்கம் அன்று கூறிய நரி என்ற வார்த்தை 2009 இற்குப் பின்னரான சூழலில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு மாத்திரமல்ல, ஏனைய சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும், குறிப்பாகத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் நரி என்ற சொல்லுக்கு விதிவிலக்கானவர்கள் அல்லர் என மூத்த ஊடகவியலாளர் நிக்சன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US