களுத்துறை விடுதியொன்றில் மீண்டுமொரு அதிர்ச்சி சம்பவம்; ஜோடிகளுக்கு நேர்ந்த கதி!
களுத்துறை - இங்கிரிய பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில், பெண் ஒருவரும் அவருடன் சென்ற நபரொருவரும் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட இருவரும் காயமடைந்த நிலையில் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தகாத உறவினால் ஏற்பட்ட தகராறு
காயமடைந்தவர்கள் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய நபரும் பனங்கலவத்த பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய பெண்ணுமாவர்.
இந்நிலையில் தகாத உறவினால் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் இங்கிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தென்னிலங்கையில் கொலை சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை பொலிஸாருக்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.