குளித்துக்கொண்டிருந்த போது திடீரென கடலில் விழுந்த ஹெலிகாப்டர்! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
புளோரிடா - மியாமி கடற்கரையை ஒட்டிய பகுதியில், வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கடலில் விழுந்து விபத்துக்குள்ள சம்பவம் அங்கிருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று சனிக்கிழமை மதியம் (19-02-2022) அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரையை ஒட்டிய பகுதியில், இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்து இடம்பெற்ற போது கடலில் குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடற்கரையில் விழுந்து விபத்துக்குள்ளான ராபின்சன் ஆர்44 ஹெலிகாப்டரில் மொத்தம் 3 பேர் பயணம் செய்துள்ளனர்.
This afternoon at 1:10 p.m., MBPD received a call of a helicopter crash in the ocean near 10 Street. Police and @MiamiBeachFire responded to the scene along with several partner agencies. Two occupants have been transported to Jackson Memorial Hospital in stable condition.
— Miami Beach Police (@MiamiBeachPD) February 19, 2022
1/2 pic.twitter.com/heSIqnQtle
பொதுமக்கள் மியாமி கடற்கரை பகுதியில் ஜாலியாக பொழுதை கழிப்பது வழக்கம். அங்கு குளிப்பதும் கடலில் நீந்துவதும் என இருந்தவர்கள் திடீரென வானத்திலிருந்து கடலில் விழுந்த ஹெலிகாப்டரை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மியாமி கடற்கரை பொலிஸார், ஹெலிகாப்டரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
இது குறித்து பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“அந்த ஹெலிகாப்டரில் மொத்தம் மூன்று பேர் பயணம் செய்தனர், ஒருவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பித்தார். மற்ற இருவரும் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். அவர்களும் நலமுடன் இருக்கின்றனர்.
இந்த விபத்து தண்ணீரில் நிகழாமல் தரையில் நிகழ்ந்திருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கக் கூடும்” என்று தெரிவித்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.