அட்சய திருதியை ; தங்கம் வேண்டாம்; வாழ்வில் வளம்பெற இதெல்லாம் மறக்காது செய்யுங்கள்!
சித்திரை மாதம் வளர்பிறை மூன்றாம் திதியான 'அட்சய திருதியை' அந்தவகையில் அட்சய திருதியை வரும் 19 ஆம் திகதி ஞாயிற்று கிழமை வருகின்றது.
அட்சய திருதியை நாளில் தற்போது தங்கம் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலையில் தங்கம் வாங்குவதுதான் பலருக்கும் கடிமான விடயம் தான்.

நற்செயல்களும், வழிபாடுகளுமே செல்வத்தைத் தரும்
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் மட்டுமே பலன் கிடைக்கும் என்பதில்லை, இந்நாளில் நாம் செய்யும் சிறிய நற்செயல்களும், எளிமையான வழிபாடுகளுமே வற்றாத செல்வத்தைத் தரும் என்பது ஐதீகம்.
தங்கம் வாங்க இயலாதவர்கள் கூட, தங்கள் இல்லத்தில் குபேர யோகத்தைப் பெற செய்ய வேண்டிய எளிமையான 'அட்சய பானை' இரகசியம் குறித்து இங்கே காண்போம். அட்சயம் என்றால் 'குறைவில்லாதது' என்று பொருள்.

இந்நாளில் மகாலட்சுமியின் அருளைப் பெற உங்கள் வீட்டில் உள்ள ஒரு பித்தளை அல்லது வெண்கல பானையை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் பானையைச் சுத்தப்படுத்தி குங்குமம் இட்டு, அதன் உள்ளே பச்சரிசியை முழுமையாக நிரப்ப வேண்டும்.
தங்கம் வாங்க வசதி இல்லாதவர்கள், அந்த அரிசி பானையின் மேல் ஒரு நாணயத்தை அல்லது வீட்டில் உள்ள ஏதேனும் ஒரு தங்க நகையை வைத்து அலங்கரிக்கலாம். பானையின் கழுத்தில் மஞ்சள் துணி கட்டி, துளசி மற்றும் மலர்களால் அலங்கரித்து நெய் தீபமேற்றி வழிபட வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் மகாலட்சுமி உங்கள் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை. இதேவேளை உடல்நலக் குறைவால் அவதிப்படுபவர்களுக்கு இந்த நாள் ஒரு வரப்பிரசாதம்.
ஆலமர இலையில் 'மகா மிருத்யுஞ்ஜய' மந்திரத்தை ஜெபித்து, அந்த இலையை நோயாளியின் தலையணையின் கீழ் வைப்பதன் மூலம் தீராத நோய்களும் விரைவில் குணமாகும் என நம்பப்படுகிறது.

தானங்களும் பலன்களும்...
அட்சய திருதியை அன்று நாம் பிறருக்குக் கொடுக்கும் ஒவ்வொரு பொருளும் நமக்கு பல மடங்கு புண்ணியமாகத் திரும்பும்.
ஏழைகளுக்கு உணவு, குடை மற்றும் நீர்மோர் வழங்குவது மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கையைத் தரும்.
ஆடை தானம் நோய்களைத் தீர்க்கும்

பழங்களைத் தானம் செய்வதால் உயர் பதவிகள் தேடி வரும்.
கல்வியில் சிறந்து விளங்க விரும்புபவர்கள் இன்று பானகம் தானம் செய்வது விசேஷம்.

அதுமட்டுமல்லாது இந்நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது தீராத வறுமையை நீக்கி, குடும்பத்தில் சுபிட்சத்தை உண்டாக்கும்.
புண்ணிய நதிகளில் நீராடி, உங்களால் முடிந்த சிறு உதவியை எளியவர்களுக்குச் செய்வதன் இவ்வாறு செய்வதன் மூலம் இந்த அட்சய திருதியையில் குறைவில்லாத செல்வத்தை பெற்றிடலாம்.