இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை ; பொலிஸார் வெளியிட்ட தகவல்!
தென்னிலங்கையில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது . இந்த சம்பவம் லுணுகம்வெஹர, பஞ்சி அப்புஜந்துர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 31 வயதுடைய நபரே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் லுனுகம்வெஹர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாக பொலிசார் கூறியுள்ளனர்.