பன்றிகளை தாக்கும் வைரஸ் தொற்று
மேல் மாகாணத்திலுள்ள 4 பண்ணைகளில் பன்றிகளிடையே வைரஸ் தொற்று பரவி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நோய் தொற்று காணப்படும் பண்ணைகளில் இருந்து பன்றிகளை வெளியே கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் கே.கே. சரத் தெரிவித்துள்ளார்.
மனிதர்களுக்கு பரவாது
அதேவேளை இந்த வைரஸ் தொற்று இதற்கு முன்னரும் நாட்டில் பதிவாகியுள்ளதாகவும் இது வேகமாக பரவும் அபாயம் இல்லை எனவும் வைரஸ் மனிதர்களுக்கு பரவாது எனவும் மேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி தேவையான போதிலும் அந்த தடுப்பூசிகள் தற்போது நாட்டில் இல்லை என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.