வெளிநாட்டில் இருந்து யாழ் வந்த புலம்பெயர் தமிழருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
வெளிநாட்டில் இருந்து வந்து , யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்த நபரின் உடமைகளை களவாடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில் விரைந்து செயல்பட்ட அச்சுவேலி பொலிஸார், திருட்டு சந்தேக நபரை பொலிஸார் ஒரு மணி நேரத்தில் கைது செய்து , திருட்டு போன பொருட்களையும் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அதிரடி காட்டிய பொலிஸார்
நீண்ட காலமாக வெளிநாட்டில் வசித்து வந்தவர் விடுமுறையை களிக்கும் நோக்குடன் யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வீடொன்றில் தங்கி இருந்துள்ளார்.
குறித்த வீட்டினுள் நேற்றைய தினம்(13) செவ்வாய்க்கிழமை உள்நுழைந்த திருடன் , வீட்டில் இருந்த வெளிநாட்டு வாசியின் மடிக்கணினி, கையடக்க தொலைபேசி, கடவுச்சீட்டு, வங்கி அட்டைகள், வங்கி புத்தகங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை களவாடி சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாரிடம் முறையிட்டதை அடுத்து , துரித விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் அச்சுவேலி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.