விஸ்வ புத்தருக்கு மீண்டும் விளக்க மறியல்
பௌத்த மத கருத்துகளை இழிவுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான 'விஷ்வ புத்த' என்ற நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் நுகேகொட நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பௌத்த கருத்துகளை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட கருத்துக்களை தொடர்ந்து கடந்த வாரம் கலகெடிஹேன பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர், நுகேகொடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், இன்று நுகேகொடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.