நோயற்ற வாழ்வுக்கு ; தினமும் ஒரு கைப்பிடி ஊற வைத்த வேர்கடலை போதும்
வேர்க்கடலை நம்மை பொறுத்தவரை ஒரு சிறந்த சிற்றுண்டி. சிலர் வேகவைத்து, சிலர் வறுத்து, சிலர் கடலை மிட்டாயாக என பல்வேறு வடிவங்களில் எடுத்துக் கொள்வார்கள். மேலும் நாம் அடிக்கடி சாப்பிடும் மிக்சர் போன்ற பல்வேறு உணவுப் பொருட்களிலும் வேர்க்கடலை சேர்க்கப்படுகிறது.
இவை எளிதாக கிடைக்கக் கூடியது, விலை மலிவானது, ஆனால் ஆரோக்கியத்தில் அக்ரூட் பருப்புகள் மற்றும் பாதாம் பருப்புகளைப் போல் சக்திவாய்ந்தவை. இத்தகைய வேர்க்கடலையின் நன்மைகளை இப்போது பார்ப்போம்.
வேர்க்கடலையை, எண்ணெயில் வறுத்து சாப்பிடுவதற்கு பதிலாக, ஊற வைத்த வேர்கடலை எண்ணற்ற நன்மைகளை செய்யும். ஊட்டச்சத்து பலன் முழுமையாக கிடைக்கும். இதன் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக உடலில் உறிஞ்சப்படுகின்றன.
வேர்க்கடலையில், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும், வைட்டமின் ஈ, புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் பி, பொட்டாசியம், மெக்னீசியம் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.
செரிமான சக்தியை மேம்படுத்தும்
ஊறவைத்த வேர்க்கடலை செரிமான சக்தியை மேம்படுத்தும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கி வயிற்றை சுத்தம் செய்கிறது. மேலும் அசிடிட்டி, வயிறு உப்பிசம் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
இதய நோய்
வேர்க்கடலையில் உள்ள மோனோ சாட்டிரேட்டட், பாலி அண்சாசுரேடட் கொழுப்புகள், கெட்ட கொழுப்பை எரித்து இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்
உடலுக்கு கதகதப்பை கொடுக்கும் வேர்கடலை, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் நாள் முழுவதும், உடலும் மூளையும் சுறுசுறுப்பாக இருக்கும்.
மூட்டு பிரச்சனைகளை தீர்க்கும்
ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் நிறைந்த வேர்க்கடலை, உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது. இதனால் மூட்டு வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்