மாத்தறை சிறைச்சாலை கைதிகள் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் குழுவொன்று சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 8 கைதிகள் அதிக காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் எதிரொலியாக, வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த சிறைச்சாலைக்குள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.
தடுப்பு நடவடிக்கையாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் பணிப்புரைக்கு அமைய, மாத்தறை சிறைச்சாலையில் தண்டனை அனுபவிக்கவுள்ள அனைத்து புதிய கைதிகளும் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.
கூடுதலாக, அனைத்து பார்வையாளர்களும் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.