கடலாமை கறி சாப்பிட 8 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு: 78 முதியவர்கள் வைத்தியசாலையில்!
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியாவில் கடலாமை கறியை சாப்பிட்டதில் 8 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தான்சானியா - ஜஞ்சிபார் என்ற பகுதிக்கு உட்பட்டது பெம்பா தீவில் வசித்து வரும் பொது மக்கள் ஆமைக் கறியை சாப்பிட்டுள்ளனர்.
இதில், முதியவர்கள் 78 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 8 குழந்தைகள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மாவட்ட மருத்துவ அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
உயிரிழந்தோர் அனைவரும் கடலாமை கறியை சாப்பிட்டவர்கள் என மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.
இதில், 78 முதியவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த ஆமை கறி விஷம் நிறைந்தது என்று சந்தேகிக்கப்படுகிறது ''என தெரிவித்துள்ளார்.