வவுனியாவில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு
வவுனியாவில் மேலும் நான்கு பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் மூவர், நோய் தாக்கம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவர்கள் கோவிட் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அத்துடன், வீட்டில் மரணமடைந்த ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் அவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, வைரவபுளியங்குளம், தோணிக்கல், கனகராயன்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர்.
இதனையடுத்து சுகதாதார நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களது உடலை தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.