ஹோட்டல் இடம்பெற்ற மோசமான சம்பவம்; முகாமையாளர் உட்பட மூவர் கைது
கெக்கிராவ நகரிலுள்ள ஹோட்டலுக்குச் சென்றிருந்த வாடிக்கையாளர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஹோட்டல் முகாமையாளர் உட்பட மூவரை கெக்கிராவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கெக்கிராவ மஹா வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (24) மாலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வாக்குவாதம்
உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளருக்கும் ஹோட்டல் முகாமையாளருக்கும் இடையில் நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து ஹோட்டல் முகாமையாளர் உட்பட மூன்று ஊழியர்கள் வாடிக்கையாளரை தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலில் காயமடைந்த நபர் கெக்கிராவ பொலிஸ் அதிகாரிகளால் உடனடியாக தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கெக்கிராவ திப்பட்டுவெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளார்.
தமிழர் பகுதியில் தாயை பாதுகாக்க சென்று உயிரை துறந்த இளைஞன் ; உறவினர்களால் இரவில் நடத்தப்பட்ட கொடூரம்
வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த இளைஞனின் வாழ்வை மாற்றிய சம்பவம் ; சகோதரர்களின் மரணத்தால் தவிக்கும் குடும்பம்
யாழ். விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தமிழ் அமைச்சர் எதிர்ப்பு; நாக விகாரைக்குள் ஒளிக்கப்பட்ட சிலை ; பகீர் தகவல்