யாழில் 22 வயது இளம்பெண்ணிற்கு கொரோனாவால் காத்திருந்த பெரும் சோகம்
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை-மந்திகை ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த 22 வயது இளம் பெண் உள்ளிட்ட இருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பருத்தித்துறை சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவர் மூன்று நாள்களாக காய்ச்சலுடன் சுகயீனமாக இருந்த நிலையில் இன்று காலை மூச்சு எடுப்பத்தில் சிரமாக இருந்துள்ளார்.
இதன் காரணமாக குறித்த இளம் பெண்ணை மந்திகை மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக்கு அனுமதித்த போது மருத்துவ பரிசோதனையில் அவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இளம் பெண்ணின் மாதிரிகளில் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுத்த போது, கொரோனா நோய்த்தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.