துறைமுகத்தில் தேங்கியுள்ள 2,187 மெற்றிக்தொன் சீனி!
நாட்டில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், துறைமுகத்தில் தேங்கியுள்ள 2187 மெற்றிக்தொன் சீனி அடங்கியுள்ள 81 கொள்கலன்களை கட்டணமில்லாமல் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டொலர் பெறுமதி அதிகரித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் போது இறக்குமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அமைச்சரவை மட்டத்தில் தீர்வு காண எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக துறைமுக மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக மானிய விலையின் அடிப்படையில் விநியோகிக்க உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கொவிட் தாக்கத்தினால் அரசாங்கமும், நாட்டு மக்களும் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள வேளையில் ஒரு சில மாபியாக்கள் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து , அப்பொருளுக்கான கேள்வி சந்தையில் அதிகரிக்கும் போது அதனை அதிக விலைக்கு விற்கிறார்கள்.
இந்நிலையில் அவ்வாறே சீனியின் விற்பனை விலையும் அதிகரித்துள்ளதாகவும் அவர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.