சிறுமியை வன்புணர்ந்த மாமாவுக்கு 10 வருட கடூழிய சிறை
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
10 வருட கடூழிய சிறைத்தண்டணை
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் திகதி, குறித்த சிறுமியின் மாமா முறையான , தனது ஒன்றைவிட்ட சகோதரியின் மகளான 14 வயது சிறுமியை, 55 வயதுடைய நபர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர், விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வந்தது.
கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் குறித்த நபர் குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டார்.
இதனையடுத்து, அவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டணையும் 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமாக செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.