இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்ற மேலும் 12 பேர்!
இலங்கையில் இருந்து மேலும் 12 பேர், நேற்றைய தினம் (20-09-2022) தமிழகத்தின் ராமேஸ்வரம் சென்றடைந்ததாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
தனுஷ்கோடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 4வது தீவில் இருந்து இந்திய கடலோர காவல்படையினர் இந்த 12 பேரையும் மீட்டுள்ளனர்.
நேற்று செவ்வாய்கிழமை தமிழகத்துக்கு வந்தவர்களில் 3 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் உள்ளனர் என்று இந்திய செய்திகள் கூறுகின்றன.
இந்த 12 பேரும் மூன்று வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை 4வது தீவில் இறக்கிவிடுவதற்காக மீன்பிடி படகுக்காக, தமது இதுவரை சேமித்து வைத்திருந்த பணத்தை செலுத்தியதாக, தமிழகத்துக்கு சென்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடங்கியதில் இருந்து இதுவரை 170 பேர் தமிழகத்துக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.